சிட்டி ஆஃப் ஹோப் (நம்பிக்கை நகரம்): காந்தி, கிங் & 1968 புவர் பீப்பிள்ஸ் காம்பெய்ன் (ஏழை மக்களின் பிரச்சாரம்)

முகாம்களுக்கு இடையே அமர்ந்துள்ள பெண், ரீசரக்‌ஷன் சிட்டி (மறுமலர்ச்சி நகரம்), வாஷிங்டன் டி.சி., 1968

ராபர்ட் ஹூஸ்டன் (1935-2021)

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), ராபர்ட் மற்றும் க்ரேடா ஹூஸ்டன் அளித்த நன்கொடை © Robert Houston

தி ஸ்மித்சோனியன் இன்ஸ்டிட்யூஷன் ட்ராவலிங் எக்ஸிபிஷன் சர்வீஸ் (ஸ்மித்சோனியன் பயணிக்கும் நிறுவனங்கள் கண்காட்சி சேவை), ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியக) அமைப்புடன் இணைந்து, யு.எஸ் மிஷன் டு இந்தியா (இந்தியாவுக்கான அமெரிக்காவின் பணி) மற்றும் ரீரீதி அறக்கட்டளையின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

1960-களில், உலக அரங்கில் பொருளாதாரத் தலைமையாக அமெரிக்கா பிரதான அங்கம் வகித்தது. ஆனால் கடும் வறுமையினால், அமெரிக்காவின் பெரும் கனவை நனவாக்க உதவக் கூடிய வாய்ப்புளை அமெரிக்கர்கள் இழக்கும் நிலை உருவானது. 1964 இல் அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்சன், வார் ஆன் புவர்ட்டி (வறுமைக்கு எதிராக போர்) பிரகடனம் செய்த போதிலும், லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வாழ்வாதாரம் இழந்து, தங்குமிடம் இன்றி, சத்தான உணவும், தரமான கல்வியும் கிடைக்காமல், தங்களுக்கும் தங்கள் வாரிசுகளுக்கும் நல்ல சுகாதார வசதி இல்லாமல் கடுமையாக போராடும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

அந்நிலையில், வறுமையை ஒரு மனித உரிமைப் பிரச்சினையாக அறிவித்த சதர்ன் கிறிஸ்டியன் லீடர்ஷிப் கான்ஃபரன்ஸ் (தெற்கு கிறிஸ்தவ தலைமை மாநாடு) (SCLC), அடித்தட்டில் உள்ளவர்களுக்கான, பல்வேறு இன மக்களின் வறுமைக்கும் எதிரான ஒரு அறப்போராட்டத்தை, புவர் பீப்பிள்ஸ் காம்பெய்ன் (ஏழை மக்களின் பிரச்சாரம்) என்ற தலைப்பில், 1968-ஆம் ஆண்டு டாக்டர். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தலைமையில் ஏற்பாடு செய்தது. அந்த இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கான ஆதரவாளர்களில், ஆயிரக்கணக்காணோர் வாஷிங்டன், டி.சி. நகரை அடைந்து, தங்கள் நோக்கத்தை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1968 -ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே 43 நாட்களுக்கு, பொருளாதார உரிமைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் கோரி போரட்டத்தில் ஈடுபட்ட அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ரீசரக்‌ஷன் சிட்டி (மறுமலர்ச்சி நகரம்) என்று அழைக்கப்பட்ட போராட்ட பாசறையில் வாழ்ந்தனர்.

அந்த கூடாரங்கள் நிறைந்த நகரத்தையோ அல்லது வாஷிங்டன் டி.சி.யில் பிரச்சாரம் தொடங்குவதையோ பார்க்க டாக்டர். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் இல்லை, (1968, ஏப்ரல் 4-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்). ஆனால் அவரது நெருங்கிய கூட்டாளி டாக்டர். ரால்ப் அபெர்னாதி, அந்த இயக்கத்தைத் தொடர்ந்து முன்னடத்தினார். அமெரிக்க கனவு மற்றும் பொருளாதார ரீதியான நீதி மீது எதிர்பார்ப்பு கொண்ட டாக்டர்.கிங்கின் நம்பிக்கையை உயிர்த்தெழுப்பிய அந்த போரட்ட முகாமை சிட்டி ஆஃப் ஹோப் (நம்பிக்கை நகரம்) என்று அபெர்னாதி அறிவித்தார்.

புவர் பீப்பிள்ஸ் காம்பெய்ன் (ஏழை மக்களின் பிரச்சாரம்) 1968 இல் தொடங்கப்பட்டாலும், 1959 இல் நிகழ்ந்த ஒரு மாத கால இந்திய சுற்றுப்பயணத்தின் போதுதான் அந்த இயக்கத்திற்கான விதைகள் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மனதில் விதைக்கப்பட்டது. அமெரிக்க பொது உரிமை சட்டங்கள் மீதான மகாத்மா காந்தியின் தாக்கத்தையும், உலகளவிலான பொருளாதார நீதி மற்றும் மனித உரிமைகள் மீதான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் வலுவான தொலைநோக்கையும் அங்கீகரிக்கும் பொருட்டு, தி நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), தி ஸ்மித்சோனியன் இன்ஸ்டிட்யூஷன் ட்ராவலிங் எக்ஸிபிஷன் சர்வீஸ் (ஸ்மித்சோனியன் பயணிக்கும் நிறுவனங்கள் கண்காட்சி சேவை) மற்றும் மெரிடியன் இண்டர்னேஷனல் சென்டர் (மெரிடியன் சர்வதேச மையம்) ஆகிய அமைப்புகள் யு.எஸ் மிஷன் டு இந்தியா (இந்தியாவுக்கான அமெரிக்காவின் பணி) மற்றும் ரீரீதி அறக்கட்டளையின் ஆதரவுடன் இந்த சுவரொட்டி கண்காட்சியை ஏற்பாடு செய்தன.

விளக்கம்: ரீசரக்‌ஷன் சிட்டியின் (மறுமலர்ச்சி நகரத்தின்) வரைபடம் (சுவரொட்டியின் பின்புலமாக)

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் அமெரிக்கன் ஹிஸ்டரி (ஸ்மித்சோனியன்ஸ்அமெரிக்க வரலாற்றின் தேசிய அருங்காட்சியகம்),

க்ளாரா வாட்கின்ஸால் நன்கொடையாக வழங்கப்பட்டது

 

அமெரிக்க பொது உரிமை சட்டங்கள் மீதான இந்தியாவின் தாக்கம்: சத்தியாகிரகம் – அகிம்சைப் போராட்டம்

மாண்ட்கோமரி புறக்கணிப்பு நடந்து கொண்டிருந்தபோது, வன்முறையற்ற சமுதாய மாற்றத்திற்கான எங்கள் நுட்பமான அணுகுமுறைக்கு வழிகாட்டும் ஒளிச்சுடராக இருந்தவர் இந்தியாவின் காந்தி. – மார்ட்டின் லூதர் கிங், “மை ட்ரிப் டூ தெ லேண்ட் ஆஃப் காந்தி” (“காந்தியின் பூமிக்கு எனது பயணம்”) ஜூலை 1, 1959.

மோகன்தாஸ் காந்தி மற்றும் இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்தின் தாக்கம் அமெரிக்காவில் நிகழ்ந்த போராட்டங்களில் வெளிப்பட்டது. இந்தியாவின் உப்பு சத்தியாகிரக அணிவகுப்பால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க சமூக ஆர்வலர்கள் இந்தியாவிற்கு பயணமாக சென்று, காந்தியின் அணுகுமுறைகளைப் படிக்கவும், அமெரிக்காவில் சத்தியாக்கிரகம் (அகிம்சைப் போரட்டம்) பற்றிய காந்தியின் வழிகாட்டுதலை பகிர்ந்து கொள்ளவும் முற்பட்டனர். 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில், அந்த அணுகுமுறைகளே மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் தத்துவங்களுக்கு அஸ்திவாரமாக விளங்கின. மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்பு முதல் கிங்கின் இறுதி எதிர்ப்பான 1968 - தி புவர் பீப்பிள்ஸ் காம்பெய்ன் (ஏழை மக்களின் பிரச்சாரம்) வரை, சமூக நீதி மற்றும் மறுமலர்ச்சிக்கான ஆற்றலாக, அமைதியான எதிர்ப்பையே கையாள கிங் உறுதி பூண்டிருந்தார்.

டாக்டர். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் உரை நிகழ்த்தும் போது, வாஷிங்டன் டி.சி., 1963

ஆரோன் ஸ்டான்லி ட்ரெடிக் (1921-1999)

ஸ்மித்சோனியன் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), கிட்டி கெல்லி மற்றும் ஸ்டான்லி ட்ரெடிக்கின் எஸ்டேட் நன்கொடையாக வழங்கியது © Smithsonian Institution

 

அமெரிக்க பொது உரிமை சட்டங்கள் மீதான இந்தியாவின் தாக்கம்: சத்தியாகிரகம் – அகிம்சைப் போராட்டம்

கிங்கின் அறிவுரையாளர்கள் மற்றும் ஆரம்பகால ஆலோசகர்கள் இந்தியாவுக்குப் பயணித்து, பொது உரிமை சட்டங்களுக்காக போராடிய கிங்கிற்கு பின்னாளில் காந்தியின் சத்தியாகிரகம் (அகிம்சைப் போரட்டம்) கொள்கைகளை அறிமுகப்படுத்தினர். மாண்ட்கோமரி பேருந்துப் புறக்கணிப்பு, செல்மா முதல் மாண்ட்கோமரிக்கான நடைப்போராட்டம் மற்றும் தனது இறுதிப் போராட்டமான தி புவர் பீப்பிள்ஸ் காம்பெய்ன் (ஏழை மக்களின் பிரச்சாரம் வரை), ஒவ்வொரு பிரச்சாரத்திலும் அவர் காந்தியின் வழிமுறைகளைப் பின்பற்றினார். கிங் தனது எழுத்து மற்றும் உரைகளில், இந்தியாவின் உப்பு சத்தியாகிரக அணிவகுப்பு மற்றும் காந்திய சிந்தனைகள் அமெரிக்காவின் பொது உரிமை சட்ட போரட்டங்களுக்கு முக்கியமானவை என்று மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் வலியுறுத்தினார். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் நிகழ்ந்த சமத்துவத்திற்கான போராட்டங்கள், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான பெருகி வரும் உலகளாவிய கோரிக்கைகளை பிரதிபலிப்பதாக மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கருதினார்.

செல்மா முதல் மாண்ட்கோமரி, நடைப்பயண போராட்டம், லவுண்டஸ் கவுண்டி, அலபாமா, 1965.

ஜேம்ஸ் ஹெச்.கரலெஸ் (1930-2002)

ஸ்மித்சோனியன் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), மோனிகா கரலெஸ் மற்றும் ஜேம்ஸ் கரலெஸ் எஸ்டேட் நன்கொடையாக வழங்கியது © Estate of James Karales

 

அமெரிக்க பொது உரிமை சட்டங்கள் மீதான இந்தியாவின் தாக்கம்; கிங்கின் இந்திய பயணம்

1959 ஆம் ஆண்டில், இந்தியாவின் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள், மற்றும் காந்தி தேசிய நினைவு நிதியம் சார்ந்த ஜி. ராமச்சந்திரன் அவர்கள் ஆகியோரின் அழைப்பை ஏற்று, மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் மற்றும் அவரது மனைவி கொரேட்டா ஸ்காட் கிங், ஒரு மாதம் இந்தியாவில் தங்கினார்கள். அவர்கள் புது தில்லியை வந்தடைந்தபோது, அவர்களை வரவேற்க பாலம் விமான நிலையத்தில் உயரதிகாரிகள், பார்வையாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் காத்திருந்தனர். அவர்களின் புரவலர்களும் பயண வழிகாட்டிகளும், புது தில்லியில் உள்ள குவாக்கர் சர்வதேச மையத்தின் இயக்குநர் ஜேம்ஸ் பிரிஸ்டல், சுவாமி விஸ்வானந்தா, ஜி. ராமச்சந்திரன் மற்றும் காந்தி ஸ்மரக் நிதி அமைப்பைச் சேர்ந்த சுசேதா கிருபலானி ஆகியோருடன், டாக்டர் மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் மற்றும் திருமதி கொரேட்டா ஸ்காட் கிங் ஜன்பத் ஹோட்டலுக்கு சென்றனர். அங்குதான் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் இந்தியாவில் தனது முதல் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார்.

மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் (l.), ஜேம்ஸ் பிரிஸ்டல் (c.), புது தில்லியில் உள்ள குவாக்கர் சர்வதேச மையத்தின் இயக்குநர், ஜி. ராமச்சந்திரன் (r.), காந்தி தேசிய நினைவு நிதியத்தின் பிரதிநிதி மற்றும் மகாத்மா காந்தியடிகளின் நெருங்கிய கூட்டாளி ஆகியோர், 1959-யில் புது தில்லி வந்தடைந்த டாக்டர். கிங்கை வரவேற்கும் காட்சி.

அமெரிக்கன் ஃப்ரெண்ட்ஸ் சர்வீஸ் (அமெரிக்க நண்பர்கள் சேவைக் குழு) சேகரிப்பிலிருந்து © American Friends Service Committee

 

அமெரிக்க பொது உரிமை சட்டங்கள் மீதான இந்தியாவின் தாக்கம்: கிங்கின் இந்திய பயணம்

செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு, டாக்டர் கிங் மற்றும் திருமதி கிங், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் முதல் சுகாதார அமைச்சரான, மகாத்மா காந்தியடிகளின் செயலாளர் ராஜ்குமாரி அம்ரித் கவுர் அவர்களுடன் மதிய உணவு உட்கொண்டார்கள். இந்தியாவில் கேபினட் அந்தஸ்து கொண்ட முதல் பெண் மத்திய அமைச்சர் என்ற பெருமையுடன், ராஜ்குமாரி அம்ரித் கவுர் அவர்கள், அகில இந்திய மகளிர் மாநாடு, மற்றும் இந்திய குழந்தைகள் நல வாரியத்தின் நிறுவன உறுப்பினராகவும் திகழ்ந்தார். கொரெட்டா ஸ்காட் கிங் தனது வாழ்நாள் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென வாதிட்டு வந்தார். மேலும், உலகெங்கிலுமுள்ள அன்னையர் மற்றும் குழந்தைகளின் சார்பாக "அன்னையர் தின அணிவகுப்பு மற்றும் பேரணி" மூலமாக தி புவர் பீப்பிள்ஸ் காம்பெய்ன் (ஏழை மக்களின் பிரச்சார) இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர் கொரெட்டா ஸ்காட் கிங்.

ராஜ்குமாரி அம்ரித் (l.), இந்திய இந்தியாவில் கேபினட் அந்தஸ்து கொண்ட முதல் பெண் மத்திய அமைச்சர் அவர்கள் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர், மற்றும் திருமதி கொரேட்டா ஸ்காட் கிங் இருவரையும் 1959-யில் புது தில்லியில் சந்தித்த போது.

அமெரிக்கன் ஃப்ரெண்ட்ஸ் சர்வீஸ் கமிட்டி (அமெரிக்க நண்பர்கள் சேவைக் குழு) சேகரிப்பிலிருந்து, © American Friends Service Committee

மதிய உணவுக்குப் பிறகு, கிங் தம்பதியினர், மாண்புமிகு இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து அவருடன் தேநீர் அருந்தினார்கள். திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள், 20 ஆம் நூற்றாண்டின் முன்னணி தத்துவவாதிகள் மற்றும் சமய அறிஞர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிங் தம்பதியினர் இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களை, 1959-யில் புது தில்லியில் சந்தித்த போது.

அமெரிக்கன் ஃப்ரெண்ட்ஸ் சர்வீஸ் கமிட்டி (அமெரிக்க நண்பர்கள் சேவைக் குழு) சேகரிப்பிலிருந்து, © American Friends Service Committee

 

அமெரிக்க பொது உரிமை சட்டங்கள் மீதான இந்தியாவின் தாக்கம்: கிங்கின் இந்திய பயணம்

“மற்ற நாடுகளுக்கு நான் சுற்றுலாப் பயணியாகச் செல்லலாம், ஆனால் இந்தியாவுக்கு யாத்ரீகனாக வருகிறேன். ஏனெனில், நான் இந்தியாவை மகாத்மா காந்தியாகவே காண்கிறேன். அவர் யுகங்களை கடந்த ஒரு சிறந்த, உண்மையான ஆளுமை கொண்டவர். அத்துடன், உலகெங்கும் அங்கீகரிக்கப்பட்ட பண்டிட் நேருவின் அறிவாற்றல் மற்றும் அரசியல் திறனுடைய பிம்பமாகவும் நான் இந்தியாவை காண்கிறேன்” - மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர்., புது தில்லி, இந்தியா, பிப்ரவரி 10, 1959.

டாக்டர் கிங் மற்றும் திருமதி கிங், பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சந்திப்புடன், தங்கள் இந்திய வருகையின் முதல் நாளை முடித்துக் கொண்டனர். 1947 இல் ஆங்கிலேயர் இந்தியாவிலிருந்து வெளியேறி இந்திய சுதந்திரத்துக்கு வழிபிறக்கக் காரணமான இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகளும், நேருவும் முக்கியத் தலைவர்களாக விளங்கியவர்கள். புது தில்லியில் உள்ள நேருவின் இல்லமான தீன் மூர்த்தி பவனில் கிங் அவரை சந்தித்த போது, முதலாளித்துவம் மற்றும் இந்தியாவின் உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதாரம் மீதான தொழில்மயமாக்கலின் தாக்கம் குறித்து, கிங்கும் பாரதப் பிரதமரும் கலந்துரையாடினர்.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், மற்றும் கொரேட்டா ஸ்காட் கிங் பாரதப் பிரதமர் திரு.ஜவகர்லால் நேரு அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்த போது, புது தில்லி, 1959.

அமெரிக்கன் ஃப்ரெண்ட்ஸ் சர்வீஸ் கமிட்டி (அமெரிக்க நண்பர்கள் சேவைக் குழு) சேகரிப்பிலிருந்து, © American Friends Service Committee

 

அமெரிக்க பொது உரிமை சட்டங்கள் மீதான இந்தியாவின் தாக்கம்: கிங்கின் இந்திய பயணம்

மறுநாள் காலை, புது தில்லியில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் நினைவிடமான ராஜ்காட்டிற்கு கிங் தம்பதியினர் வருகை தந்தனர். அங்கு மாலை, மற்றும் மலர் வளையம் வைத்து மரியாதை செய்த போது, கிங் அந்த அனுபவத்தால் நெகிழ்ச்சி அடைந்ததை கண்கூடாக காண முடிந்தது. அஞ்சலி செலுத்தும் ஒரு சிறிய சடங்கை தொடர்ந்து, அவர் முழங்காலிட்டு அமர்ந்து, பிரார்த்தனை குழுவிற்கு தலைமை தாங்கினார். அடுத்த ஒரு மாதத்தில், கிங் மற்றும் அவரது மனைவி கொரெட்டா கிங் இந்தியா முழுவதும் பிரயாணம் செய்தனர். அவர்கள் பௌத்த ஆலயங்களுக்கும், இந்துக் கோவில்களுக்குச் சென்று, காந்தியடிகளின் நண்பர்களையும், குடும்பத்தினரையும், நாடு முழுவதும் செயலாற்றி வந்த சமூக ஒருங்கிணைப்பாளர்களையும் சந்தித்தனர்.

மகாத்மா காந்தியடிகளின் நினைவிடமான ராஜ்காட்டில் கிங் தம்பதியினர், டீனா பிரிஸ்டல், ஜேம்ஸ் பிரிஸ்டல், சுவாமி விவேகானந்தர், லாரன்ஸ் ரெட்டிக், மற்றவர்களுடன, புது தில்லி, 1959.

அமெரிக்கன் ஃப்ரெண்ட்ஸ் சர்வீஸ் கமிட்டி (அமெரிக்க நண்பர்கள் சேவைக் குழு) சேகரிப்பிலிருந்து, © American Friends Service Committee

 

அமெரிக்க பொது உரிமை சட்டங்கள் மீதான இந்தியாவின் தாக்கம்: கிங்கின் இந்திய பயணம்

 

அமெரிக்க பொது உரிமை சட்டங்கள் மீதான இந்தியாவின் தாக்கம்: கிங்கின் இந்திய பயணம்

 

அமெரிக்க பொது உரிமை சட்டங்கள் மீதான இந்தியாவின் தாக்கம்: கிங்கின் இந்திய பயணம்

 

அமெரிக்க பொது உரிமை சட்டங்கள் மீதான இந்தியாவின் தாக்கம்: கிங்கின் இந்திய பயணம்

”முடிவில்லா உரையாடல்கள் மற்றும் பல்வேறு கலந்துரையாடல் அமர்வுகள் வாயிலாக ஆயிரக்கணக்கான இந்திய மக்களுடன் எங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தியா முழுதும் உள்ள பல்கலைக் கழகக் குழுக்கள் மற்றும் பொதுக் கூட்டங்களில் நான் உரையாற்றினேன். இனப்பிரச்சினை மீது இந்திய மக்களுக்கு இருக்கும் தீவிர ஆர்வத்தால், வழக்கமாக அந்தக் கூட்டங்கள் அனைத்தும் நிரம்பியிருந்தன” - மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர்., “மை ட்ரிப் டு தி லேண்ட் ஆஃப் காந்தி” (“காந்தியின் பூமிக்கு எனது பயணம்,”) 1959.

மாணவர்களைச் சந்திப்பதில் உற்சாகமடைந்த கிங், இனம், ஏகாதிபத்திய காலனித்துவம் மற்றும் அநீதியின் கலாச்சாரங்களுக்கு இடையிலான தொடர்புகள் குறித்து விரிவுரை வழங்கினார். பென்சில்வேனியாவில் உள்ள குரோசர் இறையியல் கருத்தரங்கில் பட்டதாரி மாணவராக இருந்த போதே அவர் தன் மனதில் இந்த சிந்தனைகளை வளர்க்கத் தொடங்கினார். குரோசரில், மொர்டெகாய் ஜான்சனின் ஒரு விரிவுரையில் கிங் கலந்து கொண்டார், அது அவரது வாழ்வையே மாற்றி அமைத்தது. ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கத் தலைவரான ஜான்சன், 1950 இல் சாந்திநிகேதனில் நடந்த உலக அமைதி மாநாட்டில் கலந்து கொண்டார். மேலும் அவர் அமெரிக்காவுக்குத் திரும்பிய பிறகு, பிலடெல்பியாவின் ஃபெலோஷிப் ஹவுஸில் காந்தியடிகளைப் பற்றி விரிவுரை வழங்கினார். பின்னர் நினைவு கூர்ந்தபடி உரையாற்றிய கிங், “இந்தியப் பயணத்திற்கு பின் திரும்பியிருந்த டாக்டர். ஜான்சன், எனது ஆர்வ மிகுதிக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக. மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை மற்றும் போதனைகள் குறித்து பேசினார். அவரது பேச்சில் இருந்த மின்னூட்டமிக்க ஆழ்ந்த கருத்துகளால் ஈர்க்கப்பட்ட நான் கூட்டத்திலிருந்து வெளியேறி காந்தியின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் தொடர்பான அரை டஜன் புத்தகங்களை வாங்கினேன்.”

மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர், ஒரு விரிவுரையின் போது. 1959. தி ஹிண்டு

 

அமெரிக்க பொது உரிமை சட்டங்கள் மீதான இந்தியாவின் தாக்கம்: கிங்கின் இந்திய பயணம்

”இந்தியாவில் இருப்பதால், நீதி மற்றும் மனித மாண்பை காக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தில் அகிம்சை எதிர்ப்பு முறையே தலை சிறந்த சக்திவாய்ந்த ஆயுதம் என்பதை முன்பை விட இப்போது நான் மேலும் உறுதியாக நம்புகிறேன். உண்மை என்னவெனில், மகாத்மா காந்தி தனது வாழ்வில் பிரபஞ்சத்தின் தார்மீக கட்டமைப்போடு ஒன்றுகலந்த சில உலகளாவிய கொள்கைகளை உள்ளடக்கி வாழ்ந்தார், ஈர்ப்பு விசை விதியைப் போலவே, அந்த கோட்பாடுகளும் நிராகரிக்க முடியாதவை.” – மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர், “அகில இந்திய வானொலியில் விடைபெறும் அறிக்கையில்”, மார்ச் 9, 1959.

30 நாட்களில் ஏறத்தாழ 20 நகரங்களை பார்வையிட்ட பிறகு, மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் மற்றும் அவரது பிரதிநிதிகள் குழு, 1959, மார்ச் 9, அன்று இந்தியாவை விட்டு புறப்பட்டாலும், கிங் அங்கு கற்ற பாடங்கள் அவரது வாழ்நாள் முழுவதும் எதிரொலித்தன. சுமார் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, அவரது இறுதியான லட்சியக் கனவு – தி புவர் பீப்பிள்ஸ் காம்பெய்ன் (ஏழை மக்களின் பிரச்சாரம்) என்று அழைக்கப்படும் ஒரு தேசிய வறுமை எதிர்ப்பு இயக்கம் மூலமாக காலனித்துவம், இனம், பொருளாதார நீதி மற்றும் அகிம்சை போராட்டத்தின் ஆற்றல் தொடர்பான அவரது நுண்ணறிவு பிரதிபலித்தது.

கிங்கின் இந்திய பிரயாண வரைபடம்

 

சமுதாய அணித்திரட்சி: மக்களிடமிருந்து மக்களுக்கு

”இது வாஷிங்டனில் ஒரு நாள் மட்டுமே நிகழும் அணிவகுப்பாக அல்லாமல், ஏழைகளுக்கு வேலை வாய்ப்பும், வருமானமும் வழங்க சில உறுதியான, நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை அங்கேயே தங்கியிருக்கும் நோக்கத்துடன், வேதனை மற்றும் சீற்றத்துடன் குடிமக்கள் நாட்டின் தலைநகருக்கு செல்லும் ஒரு நடைபயணம்.” - மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர், தி புவர் பீப்பிள்ஸ் காம்பெய்ன் (ஏழை மக்களின் பிரச்சாரம்) தொடர்பாக அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், டிசம்பர் 4, 1967.

தனது இந்தியப் பயணத்திற்குப் பின் ஏறத்தாழ எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 1967 இல், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் வறுமைக்கு எதிரான தனது பயணத்தை அறிவிக்க ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதைத் தொடர்ந்து, பொது உரிமை சட்டங்களுக்கான போராட்டத் தலைவரான கிங்கும், சதர்ன் கிறிஸ்டியன் லீடர்ஷிப் கான்ஃபரன்ஸூம் (தெற்கு கிறிஸ்தவ தலைமை மாநாடு) (SCLC) இணைந்து பொருளாதார நீதிக்கான தங்கள் உரிமைக் குரலை நாடு முழுவதும் சுமந்து செல்லவும், ஏழை மக்களுக்கான அணிவகுப்பிற்கு பங்கேற்பாளர்களை திரட்டவும் ’பீப்பிள் டூ பீபிள்’ (மக்களிடமிருந்து மக்களிடம்) சுற்றுப்பயணத்தைத் தொடங்கினர். வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்க பல்வேறு இனத்தவர் ஒன்றிணைந்த இந்த மக்கள் இயக்கம் பலதரப்பட்ட பிரதேசங்களையும், சமுதாயங்களையும் சார்ந்த சமூக ஆர்வலர்களை கவர்ந்திழுத்தது.

சதர்ன் கிறிஸ்டியன் லீடர்ஷிப் கான்ஃபரன்ஸூம் (தெற்கு கிறிஸ்தவ தலைமை மாநாடு), தி புவர் பீப்பிள்ஸ் காம்பெய்ன் (ஏழை மக்களின் பிரச்சாரம்) சுவரொட்டி

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), சூசன் ஜே.ஹெல்ம்ஸின் நன்கொடை

புவர் பீப்பிள்ஸ் காம்பெய்ன் (ஏழை மக்களின் பிரச்சாரம்) பொத்தான்

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), லிண்டா மற்றும் ஆர்டிஸ் காசோவின் நன்கொடை

 

சமுதாய அணித்திரட்சி: மெம்பிஸில் கிங்

ஏழை மக்களுக்கான பிரச்சாரத்தை தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பு, மெம்பிஸ் துப்புரவுத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்க 1968, ஏப்ரல் 3 ஆம் தேதியன்று டாக்டர் கிங், டென்னசிக்கு வந்தார். அனைவருக்கும் சிறந்த ஊதியம், சலுகைகள், நல்ல வேலைச் சூழல் மற்றும் வேலை வாய்ப்புகளை கோரி, SCLC யின் வறுமைக்கு எதிரான அறப்போராட்டத்துடன் தனது தொழிலாளர் இயக்கத்தை ஒன்றிணைத்தார். அன்று மாலையே, பொது உரிமை சட்டங்களுக்காக போராடிய தலைவரான டாக்டர் கிங், மேசன் கோவிலில் தனது “நான் மலையுச்சிக்கு சென்றிருக்கிறேன்” உரையை நிகழ்த்தினார்

அடுத்த நாள், 1968, ஏப்ரல் 4 ஆம் தேதியன்று, லோரெய்ன் மோட்டலின் அவரது அறைக்கு வெளியே இருந்த பால்கனியில், டாக்டர் கிங் படுகொலை செய்யப்பட்டார். திகைப்பில் ஆழ்ந்த அமெரிக்க தேசமே துக்கத்தில் மூழ்கினாலும், டாக்டர் கிங்கை கவுரவிக்கும் பொருட்டு அவர் தொடங்கிய பிரச்சாரததை முன்னெடுத்துச் சென்றது.

”கிங்கை கவுரவிப்போம்: இனவேற்றுமைக்கு முடிவு கட்டுவோம்“ பதாகை

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரை கவுரவிக்கும் ஒரு அமைதிப் பேரணியில் ஏந்தப்பட்டது, ஏப்ரல் 8, 1968.

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), ஆர்தர் ஜே ”பட்” க்‌ஷிமிட் வழங்கிய நன்கொடை

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் இறுதிச் சடங்கு: கிங்கை கவுரவிப்போம்: இனவேற்றுமைக்கு முடிவு கட்டுவோம்.

பர்க் உழ்ல், பிறப்பு 1938

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), © Burk Uzzle

 

சமுதாய அணித்திரட்சி: கேரவன்கள் (கூண்டுவண்டி)

”நகரங்களின் ஏழ்மை மிகுந்த சிறுபான்மையினர் வாழும் பகுதிகள், தெற்கின் தோட்டங்கள், இந்த தேசத்தின் ஸ்பானிஷ் மொழி பேசும் சமூகங்கள், பூர்வ அமெரிக்க இந்திய சமூகங்கள், அப்பலாச்சியா மலைப்பிரதேசத்தின் பள்ளத்தாக்குகளுக்கு இடையே மறைக்கப்பட்ட வறுமை பிரதேசங்கள் மற்றும் புளோரிடா, டெக்சாஸ், கலிபோர்னியாவின் வெப்பமான வயல் வெளிகளிலிருந்து நாங்கள் வருகிறோம். கண்ணியமான ஒரு வாழ்க்கைக்கான எங்கள் அடிப்படை உரிமையை அங்கீகரிக்க கோரி நாங்கள் இந்த தேசத்திற்கு சவால் விடுகிறோம்.” - ”1968 அமெரிக்கர்களுக்கான தி புவர் பீப்பிள்ஸ் காம்பெய்ன் (ஏழை மக்களின் பிரச்சாரத்தின்) ஒரு பிரகடனம்”

டாக்டர் கிங்கின் நெருங்கிய நண்பரான டாக்டர். ரால்ப் அபெர்னாதி அந்த இயக்கத்தைத் தொடர்ந்து வழி நடத்தினார். எதிர்ப்பாளர்களை வாஷிங்டன், DC க்கு அழைத்து வரும் பொருட்டு, பேருந்துகள் மற்றும் கார் கேரவன்களை ஏற்பாடு செய்ய உள்ளூர் சமூகங்களை சார்ந்த அமைப்பாளர்களுடன் இணைந்து அவர் செயல்பட்டார். இயக்கத்திற்கு, செய்தியாளர்கள் மற்றும் பொது மக்களிடம் கிடைத்த பேராதரவு தந்த உற்சாகத்துடன், வழி நெடுகிலும் இருந்த அனைத்து நகரங்களிலும், ஒவ்வொரு கேரவனும் (கூண்டுவண்டி) எதிர்ப்புப் பேரணிகளை நடத்தியது. அமெரிக்கா முழுவதும் 13,000 மைல்களுக்கு மேல் அந்த கேரவன்கள் (கூண்டுவண்டிகள்) பயணித்தன.

நேவார்க், நியூ ஜெர்சியிலிருந்து வந்த ஒரு கேரவன் பேருந்து, 1968

ராபர்ட் ஹ்யூஸ்டன் (1935-2021).

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), © Robert Houston

 

சமுதாய அணித்திரட்சி: தி மியூல் ட்ரெய்ன் (கோவேறு கழுதை ரயில்வண்டி)

தொலைதூர தெற்கிலிருந்து, எதிர்ப்பாளர்களின் கேரவன்கள் மற்றும் கோவேறு கழுதைகள் இழுக்கும் வண்டிகள் ஏழை விவசாயிகளின் நம்பிக்கையை சுமந்து சென்றன. அந்த இயக்கத்தின் பெரும் சக்திவாய்ந்த அடையாளமாக விளங்கிய, தி மியூல் ட்ரெய்ன் – (கோவேறு கழுதை ரயில்வண்டி), 1968, மே 13 ஆம் தேதியன்று, மிசிசிப்பியில் உள்ள மார்க்ஸில் இருந்து புறப்பட்டது. கேரவன் மிசிசிப்பி வழியாகச் பயணித்து, அலபாமாவை கடந்து, ஜார்ஜியாவுக்குச் சென்றது. கோவேறு கழுதைகளும், எதிர்ப்பாளர்களும் மே 17 ஆம் தேதியன்று அட்லாண்டாவில் ரயில்களில் ஏறி மறுநாள் வாஷிங்டன், டிசியின் எல்லைக்கு வெளிப்புறத்தை வந்தடைந்தனர்.

மியூல் ட்ரெய்ன் – கோவேறு கழுதை ரயில்வண்டி வயல்வெளியை கடக்கும் காட்சி.

ரோலன்ட் எல். ஃப்ரீமேன், (1936-2023)

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), © Roland L. Freeman

வாஷிங்டன் டி.சி யின் 14 வது தெருவில் மியூல் ட்ரெய்ன் (கோவேறு கழுதை ரயில்வண்டி)

லாரா ஜோன்ஸ், பிறப்பு, 1948

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), லாரா ஜோன்ஸ் நன்கொடையாக வழங்கியது, © Laura Jones

கோவேறு கழுதை வண்டியின் வரைபடம் கொண்ட புவர் பீப்பிள்ஸ் காம்பெய்ன் (ஏழை மக்களின் பிரச்சாரம்)

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் அமெரிக்கன் ஹிஸ்டரி (ஸ்மித்சோனியன்ஸ் அமெரிக்க வரலாற்றின் தேசிய அருங்காட்சியகம்),

டிமோதி டி.டபிள்யூ. கோனெlலியின் நினைவாக கோர்டன் மாண்ட்கோமரி கோனெல்லி வழங்கிய நன்கொடை

 

பிரச்சாரத்தின் தொடக்கம்: இயக்கத்தின் குறிக்கோள்கள்

மெரிக்காவின் மிகையான வளங்களை பகிர்ந்து கொள்ள அனுமதிக்காமல் திட்டமிட்டு ஏழை மக்களை விலக்கி வைத்திருக்கும் ஒரு அமைப்பு முறைக்குள் அவர்களை பொருத்தி வைக்க முற்படும் முயற்சிகளை அகற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். - ரால்ஃப் அபெர்னதி, அமெரிக்க தொழிலாளர் நலத் துறையின் அறிக்கை, ஏப்ரல் 29, 1968.

கிங் படுகொலை செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, 1968, ஏப்ரல் 29, தேதியன்று, அமெரிக்கா முழுவதிலும் இருந்து 100 சமூகத் தலைவர்கள், வாஷிங்டன், டிசியில் உள்ள அரசாங்க அதிகாரிகளிடம் ஏழை மக்களின் ’கோரிக்கை அறிக்கையை’ சமர்ப்பித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், கொள்கை ரீதியான சட்ட சீர்திருத்தங்கள் மூலம் அமெரிக்கர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்ப்படுத்தக்கூடிய சட்டங்களை இயற்றக் கூடியவர்களிடம் அந்த சமூகத் தலைவர்கள் நீதியும், சமத்துவமும் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

சமூக மற்றும் பொருளாதார உரிமைகள் கோரி முன்மொழியப்பட்ட மசோதாவின் அம்சங்கள் பின்வருமாறு:

  • பண்ணை தொழிலாளர்களுக்கான கூட்டு பேரம் பேசும் உரிமைகள்

  • அமெரிக்க பூர்வகுடிகள் மற்றும் மெக்சிகன் அமெரிக்கர்களுக்கான நில உரிமைகள்

  • நாட்டின் 256 ஏழ்மையான மாவட்டங்களுக்கான அவசர உணவு விநியோக திட்டம்

  • 1968-இல் பத்து லட்சம் வேலைகளை உருவாக்கவும், 1972-க்குள் மேலும் பத்து லட்சம் வேலைகளை உருவாக்கவும் பொது-தனியார் கூட்டாண்மை

  • குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவான, தரமான புதிய வீடுகளை உருவக்கும் திட்டம்

தி புவர் பீப்பிள்ஸ் காம்பெய்ன் (ஏழை மக்கள் பிரச்சார) வேளையில் மேரியன் ரைட், ஹோசே வில்லியம்ஸ் மற்றும் ரால்ஃப் அபெர்னாதி விசாரணைகளில் ஆஜராகி பேசிய போது, 1968.

க்ளாரா வாட்கின்ஸ் (1924–2012)

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்)

100 உறுப்பினர்கள் அடங்கிய சதர்ன் கிறிஸ்டியன் லீடர்ஷிப் கான்ஃபரன்ஸ் (தெற்கு கிறிஸ்தவர் தலைமைத்துவ மாநாடு) மற்றும் அதன் குழு, 1968, ஏப்ரல் 29-30, மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் அமெரிக்க அரசுத் துறைகளிடம் சமர்ப்பித்த ஏழைகளின் உரிமைகளுக்கான கோரிக்கை அறிக்கை.

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் அமெரிக்கன் ஹிஸ்டரி (ஸ்மித்சோனியன்ஸ் அமெரிக்க வரலாற்றின் தேசிய அருங்காட்சியகம்), க்ளாரா வாட்கின்ஸ் வழங்கிய நன்கொடை

புவர் பீப்பிள்ஸ் காம்பெய்ன் (ஏழை மக்கள் பிரச்சார) பொத்தான்.

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்)

ரசுல் மர் வழங்கிய நன்கொடை

 

பிரச்சாரத்தின் தொடக்கம்: அன்னையர் தின அணிவகுப்பு

சகோதரத்துவம் மற்றும் அமைதியான எதிர்காலத்திற்கான எங்கள் இறுதியான மற்றும் உறுதியான நம்பிக்கை, பெண்மையின் ஆற்றலை திறம்பட பயன்படுத்துவதில்தான் நிலைத்துள்ளது என்று நான் திடமாக நம்புகிறேன் – கொரெட்டா ஸ்காட் கிங், மே 12, 1968.

ஞாயிற்றுக்கிழமை, மே 12 ஆம் தேதியன்று நிகழ்ந்த அன்னையர் தின அணிவகுப்பு மற்றும் பேரணிக்கு கொரெட்டா ஸ்காட் கிங் தலைமை தாங்கினார். நாட்டின் தலைநகரில் அந்த பிரச்சாரத்தை பகிரங்கமாகத் தொடங்கும் முதல் பெரும் நிகழ்வாக அது விளங்கியது. கார்டோஸோ உயர்நிலைப் பள்ளியில் 6,000 நபர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்வில், திருமதி. கிங் "சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் பெண்மையின் ஆற்றலுக்கு" அழைப்பு விடுத்தார். "மனசாட்சியின் பிரச்சாரமாக" அதை சித்தரித்து அதன் ஒரு அங்கமாக அனைத்து இனப் பெண்களும் ஒன்று கூடி அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்ள ஊக்குவித்தார்.

அந்த நிகழ்வின் பிரதான அமைப்பாளரான அமெரிக்க தேசிய நல உரிமைகள் அமைப்பு, ஒன்று திரட்டிய ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் அன்னையர், குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் வேண்டுமென கோரிக்கை எழுப்பினர்.

கொரெட்டா ஸ்காட் கிங் டென்னசி, மெம்பிஸ் நகரில், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார், 1968.

டயானா டேவிஸ், பிறப்பு 1938

டயானா டேவிஸ் புகைப்படத் தொகுப்பு, ரால்ப் ரின்ஸ்லர் ஃபோக்லைஃப் ஆர்கைவ்ஸ் அண்ட் கலெக்‌ஷன்ஸ் (நாட்டுப்புற வாழ்வியல் காப்பகங்கள் மற்றும் தொகுப்புகள்), ஸ்மித்சோனியன் நிறுவனம்

நல உரிமைகள், 1968.

லாரா ஜோன்ஸ், பிறப்பு 1948

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), © Laura Jones

தேசிய நல உரிமைகள் அமைப்பின் பொத்தான், ca. 1968.

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), ரசூல் முர்ரே வழங்கிய நன்கொடை

 

சிட்டி ஆஃப் ஹோப் (நம்பிக்கை நகரம்) உருவாக்கம்: ரீசரக்‌ஷன் சிட்டியை (மறுமலர்ச்சி நகரத்தை) வடிவமைத்தல்

3000 எதிர்ப்பாளர்களைக் உள்ளடக்கிய ஒரு கூடார நகரமான ரீசரக்‌ஷன் சிட்டியை ("மறுமலர்ச்சி நகரத்தை") உருவாக்க வாஷிங்டன் டி.சி. நகரின் தேசிய வணிக வளாகப் பகுதியின் நிலத்தை ஒதுக்கித் தர வேண்டி, கட்டிடக் கலைஞர்களும், பிரச்சார அமைப்பாளர்களும் கொண்ட ஒரு தன்னார்வலர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. தொழில்சார் வல்லுநர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய கட்டிடக் கலைஞர்களின் ஒரு குழு, சுகாதாரம், தகவல் தொடர்பு, மருத்துவ உதவி மற்றும் குழந்தைகள் பராமரிப்பு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டமைப்புகளை வடிவமைத்தனர். ஒரு உணவுக் கூடாரம், கலாச்சார மையம் மற்றும் குழுக்கள் கூடும் “நேஷனல் மால்” ("பிரதான வீதி") பகுதியில் ஒரு நகர மண்டபம் ஆகியவற்றை அமைக்கும் தொலைநோக்குப் பார்வையோடு அவர்கள் செயல்பட்டனர். சமூகத்தின் ஒரு கூடுதல் அம்சமாக, அந்த கூடார நகரத்தில் சிறு அளவிலான "சுற்றுப்புற குடியிருப்புகளை" உருவாக்கவும் திட்டமிட்டனர். எதிர்ப்பாளர்களும், தன்னார்வலர்கள் தோளோடு தோள் நின்று "ரீசரக்‌ஷன் சிட்டியை" ("மறுமலர்ச்சி நகரத்தை") எழுப்பினார்கள்.

மே 13 ஆம் தேதியன்று நடந்த தொடக்க விழாவில் உரையாற்றிய பிரச்சாரத்தின் பிரதான அமைப்பாளரான ரால்ஃப் அபெர்னாதி ஆணி அடித்தாற்போல, கட்டுமானம் நிகழ்ந்த அந்தப் பகுதியை "சிட்டி ஆஃப் ஹோப்" ("நம்பிக்கை நகரம்") என்று அறிவித்தார். அந்த கட்டுமானத்தின் முதன்மையான 8 அடிக்கு 20-அடி அளவு கூடாரங்கள், வறுமை எதிர்ப்பு இயக்கத்தின் தேசிய அடையாளங்களாக உருப்பெற்றன.

ரீசரக்‌ஷன் சிட்டியின் (மறுமலர்ச்சி நகரத்தின்) வரைபடம்.

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் அமெரிக்கன் ஹிஸ்டரி (ஸ்மித்சோனியன்ஸ் அமெரிக்க வரலாற்றின் தேசிய அருங்காட்சியகம்), க்ளாரா வாட்கின்ஸ் வழங்கிய நன்கொடை

ரீசரக்‌ஷன் சிட்டியின் (மறுமலர்ச்சி நகரத்தின்) வான்வழிக் காட்சி, வாஷிங்டன் டி.சி.,1968.

லின்க்கன் நினைவுச்சின்னம், மற்றும் வாஷிங்டன் நினைவுச்சின்னத்திற்க்கும் இடையே தேசிய வணிக வளாகப் பகுதியை சார்ந்து 16 ஏக்கர் பரப்பளவில் நீண்டுள்ள கூடார நகரம்.

கென் ஜேடின் (1942-2019),

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), கென்னத் ஜேடின் வழங்கிய நன்கொடை

ரீசரக்‌ஷன் சிட்டியில் (மறுமலர்ச்சி நகரத்தில்) ஒரு கூடாரத்தை அமைக்கும் ரால்ஃப் அபெர்னாதி, வாஷிங்டன் டி.சி.

1968, பில் வின்கெல், பிறப்பு 1938,

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), © Bill Wingell

ரீசரக்‌ஷன் சிட்டியில் (மறுமலர்ச்சி நகரத்தில்) ஒரு கூடாரத்தை அமைக்கும் ஆண்கள் சிலர், வாஷிங்டன் டி.சி., 1968.

ராபர்ட் ஹ்யூஸ்டன் (1935-2021)

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), © Robert Houston

 

சிட்டி ஆஃப் ஹோப் (நம்பிக்கை நகரம்) உருவாக்கம: நம்பிக்கை கொண்ட ஒரு தேசம்

”அமெரிக்கா, வரலாற்றின் சாலைகள் சந்திப்பில் உள்ளது. மேலும் ஒரு தேசமாகவும், சீரிய சமூகமாகவும் நாம் ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் உறுதியான தீர்மானத்துடனும், துணிவுடனும் முன்னேறிச் செல்வது குறிப்பிடத்தகுந்த அளவு முக்கியமானது” - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், செய்தாளர் சந்திப்பில் தி புவர் பீப்பிள்ஸ் காம்பெய்ன் (ஏழை மக்கள் பிரச்சாரத்தை) அறிவிக்கிறார், டிசம்பர் 4, 1967.

பல இனத்தவர்களை உள்ளடக்கிய ஒரு இயக்கமாக, தி புவர் பீப்பிள்ஸ் காம்பெய்ன் (ஏழை மக்கள் பிரச்சாரம்), அமெரிக்க வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயமாக விளங்கியது. தொடர்ந்து வந்த தசாப்தங்களில், மனித உரிமைகளுக்காக நடந்த பிரச்சாரங்களுக்கு ஊக்க சக்தியாக திகழ்ந்தது. பெண்ணுரிமை, குழந்தைகளுக்கான உரிமைகள், லத்தீன் மற்றும் அமெரிக்க பூர்வ குடிகளுக்கான உரிமைகள், சுகாதார வசதிகள், முதியோர்களுக்கான பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அனைத்தும், இந்த புனிதப் போரின் அங்கங்களாக இடம்பெற்றன.

ஒரு ஆண், பெண், மற்றும் ஒரு குழந்தை பால் குடுவையுடன், ரீசரக்‌ஷன் சிட்டி (மறுமலர்ச்சி நகரம்), 1968.

ராபர்ட் ஹ்யூஸ்டன் (1935-2021)

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), © Robert Houston

இளம் பெண் மற்றும் குழந்தையுடன் ஆண், ரீசரக்‌ஷன் சிட்டி (மறுமலர்ச்சி நகரம்), 1968.

ராபர்ட் ஹ்யூஸ்டன் (1935-2021)

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), © Robert Houston

“லா டியர்ரா இஸ் நியூஸ்ட்ரா ஹெரென்சியா” (நிலம் எங்கள் பாரம்பரியம்) மறியல் அடையாளப் பதாகை, 1968.

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் அமெரிக்கன் ஹிஸ்டரி (ஸ்மித்சோனியன்ஸ் அமெரிக்க வரலாற்றின் தேசிய அருங்காட்சியகம்)

“லா டியர்ரா இஸ் நியூஸ்ட்ரா ஹெரென்சியா” (“நிலம் எங்கள் பாரம்பரியம்”) என்ற வாசகம் எழுதிய அடையாள பதாகையை ஏந்தியிருக்கும் ஆண், ரீசரக்‌ஷன் சிட்டி (மறுமலர்ச்சி நகரம்), வாஷிங்டன் டி.சி., 1968.

ஜில் ஃப்ரீட்மேன் (1939-2019)

ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம் (ஸ்மித்சோனியன் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), © Jill Freedman

 

ரீசரக்‌ஷன் சிட்டி (மறுமலர்ச்சி நகரம்): போராட்ட கலாச்சாரம்: இசை மற்றும் கலை

இசை, சந்திப்பு கூட்டங்கள் மற்றும் கல்விக்கான மைய இடமாக மும்முரமாக செயல்பட்ட இடம் "மெனி ரேசஸ் சோல் சென்டர்". ரீசரக்‌ஷன் சிட்டி (மறுமலர்ச்சி நகரத்தின்) இசை மற்றும் பன்முக கலாச்சார நிகழ்ச்சிகள், தனிக் கூடாரங்களில் வசித்த அண்டை வீட்டாரை மேலும் நெருக்கமாக்கியது. அவர்கள் பாடிய சுதந்திரப் பாடல்கள் ஒற்றுமை உணர்வையும், இயக்கத்தின் மீதான நம்பிக்கையையும் வளர்க்க உதவியது. அங்கு நடந்த ’சாட்சிக் கூட்டங்களில்’, நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த எதிர்ப்பாளர்கள் தங்கள் தனிப்பட்ட கதைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

ஃபிரடெரிக் டக்ளஸ் கிர்க்பாட்ரிக், மற்றும் ஜிம்மி கோலியர் ஆகியோர் கிடார் வாசித்து, ரால்ப் ரின்ஸ்லர், கை கேரவன், மற்றும் ஏனையோருடன் மெனி ரேசஸ் சோல் சென்டர் கூடாரத்தில் இசைக்கிறார்கள், ரீசரக்‌ஷன் சிட்டி (மறுமலர்ச்சி நகரம்), 1968.

டயானா டேவிஸ், பிறப்பு 1938, டயானா டேவிஸ் புகைப்படத் தொகுப்பு,

ரால்ப் ரின்ஸ்லர் ஃபோக்லைஃப் ஆர்கைவ்ஸ் அண்ட் கலெக்‌ஷன்ஸ் (நாட்டுப்புற வாழ்வியல் காப்பகங்கள் மற்றும் தொகுப்புகள்), ஸ்மித்சோனியன் நிறுவனம்.

ரீசரக்‌ஷன் சிட்டியில் (மறுமலர்ச்சி நகரத்தில்) தாளில் அச்சிட்ட இசைக் குறிப்புகள் விநியோகிக்கப்படுகின்றன, 1968.

இசையாசிரியர் ஜே.எட்வர்ட் ஹேக்ராஃப்ட்,

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் அமெரிக்கன் ஹிஸ்டரி (ஸ்மித்சோனியன்ஸ் அமெரிக்க வரலாற்றின் தேசிய அருங்காட்சியகம்), க்ளாரா வாட்கின்ஸ் வழங்கிய நன்கொடை

மெனி ரேசஸ் சோல் சென்டரை உருவாக்கிய மக்கள் ’ஹங்கர்ஸ் வால்’ (பசித்தவர்கள் சுவர்), சுவரோவியத்தில் தங்கள் ஆன்மாக்களை வரைந்தனர்.

— தி புவர் பீப்பிள்ஸ் காம்பெய்ன் (ஏழை மக்கள் பிரச்சாரம்): ஒரு புகைப்பட இதழ், அட்லாண்டா, ஜியார்ஜியா, சதர்ன் கிறிஸ்டியன் லீடர்ஷிப் கான்ஃபரன்ஸ் (தெற்கு கிறிஸ்தவ தலைமை மாநாடு), 1968

கோஷங்களோடும், சின்னங்களோடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் "மெனி ரேசஸ் சோல் சென்டரின்" ஒட்டுப்பலகைகள் ’ஹங்கர்ஸ் வால்’ (பசித்தவர்கள் சுவர்) என அழைக்கப்படும் துடிப்பான சுவரோவியமாக மாற்றினார்கள். ரீசரக்‌ஷன் சிட்டியில் (மறுமலர்ச்சி நகரத்தில்) உள்ள இவ்வகை இடங்கள் - அதன் கட்டிடக் கலைஞர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. இது ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் ஒற்றுமையை வலுப்படுத்தவும், அதை வெளிக்காட்டவும் உதவிய அதே சமயத்தில் நகரத்தையும், இயக்கத்தையும் தங்களுக்கு உரியாதாக ஆக்கிக்கொள்ளவும் வழி வகுத்தது.

ரீசரக்‌ஷன் சிட்டியில் (மறுமலர்ச்சி நகரத்தில்) உள்ள ஹங்கர்ஸ் வால் (பசித்தவர்கள் சுவர்) சுவரோவியத்தின் ஒட்டுப்பலகைகள்.

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), வின்செண்ட் டிஃபாரஸ்ட் வழங்கிய நன்கொடை

ரீசரக்‌ஷன் சிட்டி (மறுமலர்ச்சி நகரம்): தலைப்பின்றி.

ஜில் ஃப்ரீட்மேன் (1939-2019)

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), © Jill Freedman

 

ரீசரக்‌ஷன் சிட்டி (மறுமலர்ச்சி நகரம்): போராட்ட கலாச்சாரம்: கல்வி மற்றும் சமூக செயல்பாடு

ஏழை மக்களுக்கான பல்கலைக்கழகத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு, கவிதை, இலக்கியம், வரலாறு, வறுமை மற்றும் பொருளாதார மேம்பாடு, இனம், அரசியல் மற்றும் சமூக ஒருங்கமைப்பு ஆகிய தலைப்புகள் உள்ளடங்கிய பாடங்களுக்கான பயிற்சி வகுப்புகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்து கொண்டனர். "காந்தி: அவரது வாழ்க்கை மற்றும் மனிதகுலத்திற்கான செய்தி " வகுப்பில் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் சத்தியாகிரகம் மற்றும் அஹிம்சை போராட்டம் குறித்து விரிவுரையாற்றினார். "ஒரு காங்கிரஸுடன் பேசுவது மற்றும் முடிவுகளைப் பெறுவது எப்படி", "ஊரக மற்றும் நகர்ப்புற திட்டமிடல்", "இனவெறி மற்றும் ஆங்கில மொழி", "உத்தரவாதமான வருடாந்திர வருமானத்தின் நெறிமுறைகள்" மற்றும் "அரசியல் மாற்றத்தின் இயக்கவியல்" போன்ற நடைமுறையில் துவங்கி சிந்தனையைத் தூண்டும் தலைப்புகளை கையாளும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன.

ஏழை மக்களுக்கான பல்கலைக்கழக பெயர் பதாகை, 1968.

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் அமெரிக்கன் ஹிஸ்டரி (ஸ்மித்சோனியன்ஸ் அமெரிக்க வரலாற்றின் தேசிய அருங்காட்சியகம்), க்ளாரா வாட்கின்ஸ் வழங்கிய நன்கொடை

பாட வகுப்பு நடப்பது- ரீசரக்‌ஷன் சிட்டி (மறுமலர்ச்சி நகரம்), 1968.

லாரா ஜோன்ஸ், பிறப்பு, 1948

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), லாரா ஜோன்ஸ் நன்கொடையாக வழங்கியது, © Laura Jones

 

ரீசரக்‌ஷன் சிட்டி (மறுமலர்ச்சி நகரம்): போராட்ட கலாச்சாரம்: கல்வி மற்றும் சமூக செயல்பாடு

தி புவர் பீப்பிள்ஸ் காம்பெய்ன் (ஏழை மக்கள் பிரச்சாரம்) பிரச்சாரத்திற்கான ஆதரவு வழங்கியதில் தி யுனைடட் ஆட்டோ வொர்க்கர்ஸ் (ஐக்கிய கார் தொழிலாளர்கள்) (UAW), முக்கிய பங்கு வகித்தது. நிதி மற்றும் நிறுவன ரீதியான உதவிகளை செய்தது மட்டுமின்றி, தொழிலாளர்களை அணிதிரட்டுவதிலும், சட்ட ரீதியிலான அணுகுமுறைகளுக்கும் ஆதரவுக் கரம் நீட்டியது. இந்த அமைப்பின் இத்தகைய ஈடுபாடு, அமெரிக்காவின் பொது உரிமைகளுக்கும், சமூக நீதி இயக்கங்களுக்கும் ஆதரவளிக்கும் அமெரிக்க தொழிற் சங்கங்களின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்தது, மெம்பிஸில் துப்புரவு தொடர்பான வேலைநிறுத்தத்தின் போது கிங் கையாண்ட அணுகுமுறையை போலவே, ஏழை மக்கள் பிரச்சாரம் பிரச்சாரத்தின் போது, தொழிலாளர் உரிமைகளுக்கும், பொருளாதார சமத்துவத்திற்கும் இடையிலான உறவிணைப்பை UAWவும் அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.

ஒருமைப்பாட்டு தினத்தில் ஒரு எதிர்ப்பாளர் தி யுனைடட் ஆட்டோ வொர்க்கர்ஸ் (ஐக்கிய கார் தொழிலாளர்கள்) (UAW) தொழிற்சங்க பதாகையை பிரதிபலிப்பு குளத்தில் நின்றவாறு ஏந்தியிருந்தார், ரீசரக்‌ஷன் சிட்டி (மறுமலர்ச்சி நகரம்), 1968.

லாரா ஜோன்ஸ், பிறப்பு, 1948

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), லாரா ஜோன்ஸ் நன்கொடையாக வழங்கியது, © Laura Jones

தி யுனைடட் ஆட்டோ வொர்க்கர்ஸ் (ஐக்கிய கார் தொழிலாளர்கள்) (UAW) பெயர் பதாகை, 1968.

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் அமெரிக்கன் ஹிஸ்டரி (ஸ்மித்சோனியன்ஸ் அமெரிக்க வரலாற்றின் தேசிய அருங்காட்சியகம்).

 

ரீசரக்‌ஷன் சிட்டி (மறுமலர்ச்சி நகரம்): ப்யூர்டோ ரிகன் தினம்

எங்கள் நீக்ரோ சகோதரர்கள், எங்கள் மெக்சிகன் சகோதரர்கள், எங்கள் பூர்வ அமெரிக்க இந்திய சகோதரர்கள், எங்கள் அப்பலாச்சியன் வெள்ளை சகோதரர்கள் ஆகியோருக்கு ஆதரவளிகும் விதமாக நாங்கள் வாஷிங்டனுக்கு வந்துள்ளோம். ஆண்களாக நாங்கள் எல்லா மனிதர்களுக்கும் சகோதரர்கள், எல்லா மனிதர்களும் எங்களுக்கு சகோதரர்கள் என்னும் காரணத்தாலேயே நாங்கள் இங்கே இருக்கிறோம். க்யூ வீவா ப்யூர்டோ ரிகோ! – ஜோசப் மோன்சேராட், ப்யூர்டோ ரிகன் தினம், ரீசரக்‌ஷன் சிட்டி (மறுமலர்ச்சி நகரம்), ஜூன் 15, 1968.

ஜூன் 15 ஆம் தேதியன்று, புவேர்ட்டோ ரிக்கன் தினத்தை கவுரவிப்பதை முன்னிட்டு, தி புவர் பீப்பிள்ஸ் காம்பெய்ன் (ஏழை மக்கள் பிரச்சாரம்) ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. சுமார் 5000 நபர்கள் ஒரு நாள் முழுவதும் உரைகளிலும், சிறப்பு நிகழ்வுகளிலும், பிற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் பொருட்டு வாஷிங்டன், டி.சி.யில் திரண்டனர். போரிகுவா (ப்யூர்டோ ரிகன்) தீவின் பெருமை, பாரம்பரியம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை பறைசாற்றும் வருடாந்திர கொண்டாட்டமான ப்யூர்டோ ரிகன் தினம் 1958 இல் நியூயார்க் நகரில் தொடங்கி, தொடர்ந்து நாடெங்கிலுமுள்ள பிற நகரங்களுக்கு பரவியது.

ப்யூர்டோ ரிகன் தினத்தில் கிடாருடன் ஆணும் பெண்ணும், ரீசரக்‌ஷன் சிட்டி (மறுமலர்ச்சி நகரம்), 1968.

ஜில் ஃப்ரீட்மேன் (1939-2019)

ஸ்மித்சோனியன் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), © Jill Freedman

துவக்கத்தில் ஜூன் 8 ஆம் தேதியன்று ப்யூர்டோ ரிகன் தினத்தை கொண்டாட அமைப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர், ஆனால் அந்த நிகழ்வு மறுஅட்டவணைப்படி ஜூன் 15 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது

ப்யூர்டோ ரிகன் தின சுவரொட்டி, 1968.

ஸ்மித்சோனியன் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்)

 

ரீசரக்‌ஷன் சிட்டி (மறுமலர்ச்சி நகரம்): ஒருமைப்பாடு தினம்

தி புவர் பீப்பிள்ஸ் காம்பெய்ன் (ஏழை மக்கள் பிரச்சாரம்) பிரச்சாரத்தின் தலையாய நிகழ்வாக விளங்கிய ஒருமைப்பாடு தினம் ஜூன் 19 ஆம் தேதியன்று ஒரு மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்காக 50,000 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை தேசிய வணிக வளாகம் பகுதிக்கு கவர்ந்திழுத்து வந்தது. லின்கன் நினைவகத்தின் படிகளில் நின்றபடி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் “எனக்கு ஒரு கனவு இருக்கிறது” என்று குறிப்பிட்டு உரையாற்றினார். அமெரிக்க கனவின் வாக்குறுதிகளான நீதி, சமத்துவம் மற்றும் அனைவருக்குமான பொருளாதார வாய்ப்புகள் குறித்து பிரச்சாரத் தலைவர்கள் மக்களிடம் உரையாற்றினார்கள்.

ஒருமைப்பாடு தினத்தன்று திரண்ட மக்கள் கூட்டம், ரீசரக்‌ஷன் சிட்டி (மறுமலர்ச்சி நகரம்), 1968.

டயானா டேவிஸ், பிறப்பு 1938

டயானா டேவிஸ் நிழற்பட தொகுப்பு, ரால்ஃப் ரின்ஸ்லர் ஃபோக்லைஃப் ஆர்கைவ்ஸ் அண்ட் கலெக்‌ஷன்ஸ், ஸ்மித்சோனியன் நிறுவனம்

ஒருமைப்பாடு தின பொத்தான், 1968.

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் அமெரிக்கன் ஹிஸ்டரி (ஸ்மித்சோனியன்ஸ் அமெரிக்க வரலாற்றின் தேசிய அருங்காட்சியகம்)

க்ளாரா வாட்கின்ஸ் நன்கொடையாக வழங்கியது

‘அமெரிக்கா! வை நாட் நௌ?’ (அமெரிக்கா! ஏன் இப்போது இல்லை?) பதாகை, 1968.

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் அமெரிக்கன் ஹிஸ்டரி (ஸ்மித்சோனியன்ஸ் அமெரிக்க வரலாற்றின் தேசிய அருங்காட்சியகம்)

க்ளாரா வாட்கின்ஸ் நன்கொடையாக வழங்கியத

 

மறுமலர்ச்சி நகரம்: மழை, வெள்ளம் மற்றும் சேறு

மறுமலர்ச்சி நகரத்தின் சேற்றில் நாங்கள் ஒன்றாகச் சுழன்ற சமயத்தில்தான் எங்கள் அமெரிக்க அனுபவத்தில் முதன்முறையாக ஒருவரையொருவர் கேட்கவும், உணரவும், பார்க்கவும் அனுமதிக்கப்பட்டோம். - ரெவ்.ஜெஸ்ஸி ஜாக்சன், “மறுமலர்ச்சி நகரம்”, எபோனி, அக்டோபர் 1968.

ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களை வாஷிங்டன், டி.சி.க்கு வரவழைப்பது, மறுமலர்ச்சி நாகரத்தை கட்டமைத்து உருவாக்குவது மற்றும் வானிலையுடனான சவால்கள் ஏழை மக்கள் பிரச்சாரம் என பல சவால்களை எதிர்கொண்டது. மறுமலர்ச்சி நகரம் மூடப்பட்ட சமயத்தில், 19 சென்டிமீட்டர் (7.5 அங்குலங்கள்) மழை, துடிப்பான அந்த கூடார நகரத்தை குளங்கள் மற்றும் சேற்று வயல்களாக மாற்றி இருந்தது. பல போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற இந்த மோசமான நிலை காரணமாக இருந்தாலும், மற்றவர்கள் தங்கியிருந்து இயக்கப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார்கள்.

வெள்ளம் சூழ்ந்த ரீசரக்‌ஷன் சிட்டி, 1968.

ராபர்ட் ஹூஸ்டன் (1935-2021)

ஸ்மித்சோனியன் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), © Robert Houston

சேற்றில் நடந்து செல்லும் பெண், குழந்தை, மற்றும் சமயம் சார்ந்த நபர்,

மறுமலர்ச்சி நகரம், 1968.

ராபர்ட் ஹூஸ்டன் (1935-2021)

ஸ்மித்சோனியன் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்) © Robert Houston

 

மறுமலர்ச்சி நகரம்: மறுமலர்ச்சி நகரத்திலிருந்து வெளியேறும் படலம்

1968, ஜூன் 23, ஞாயிற்றுக்கிழமையன்று, தேசிய வணிக வளாகப் பகுதியை ஆக்கிரமிப்பதற்கான பிரச்சாரத்தின் அனுமதி காலாவதியானது. அரசுத் துறைகள் மற்றும் வாஷிங்டன், டி.சி. பெருநகர காவல் துறையை சந்தித்து, மறுமலர்ச்சி நகரத்திலிருந்து அமைதியான முறையில் வெளியேறுவது குறித்து இயக்கத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஜூன் 24, திங்கட்கிழமையன்று, அந்த இடத்திற்குள் நுழைந்த காவல்துறை அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டனர். அடுத்த 90 நிமிடங்களுக்குள், கூடார நகரம் மூடப்பட்டது. ரால்ஃப் அபெனாதி உட்பட மறுமலர்ச்சி நகரம் மற்றும் அரசுத் துறை கட்டிடங்களில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 360 க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்களை அதிகாரிகள் கைது செய்தனர். அமெரிக்க கேபிடல் கட்டிடத்தில் போராட்டம் நடத்தும் போது ரால்ஃப் அபெனாதி கைது செய்யப்பட்டார். சிறைக்கு அழைத்துச் செல்லக் காத்திருந்த பேருந்தில், டாக்டர் அபெர்னாதி, "என்னுடைய நிரந்தரச் சிறைத் தோழர் மார்ட்டின் லூதர் கிங் மட்டும் இங்கு காணவில்லை" என்று குறிப்பிட்டார்.

ரால்ஃப் அபெனாதி கைது செய்யப்பட்டார், வாஷிங்டன், டி.சி., 1968.

லாரா ஜோன்ஸ், பிறப்பு, 1948

ஸ்மித்சோனியன் நேஷனல் மியூசியம் ஆஃப் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் ஹிஸ்டரி அண்ட் கல்சர் (ஸ்மித்சோனியன்ஸ் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகம்), லாரா ஜோன்ஸ் நன்கொடையாக வழங்கியது, © Laura Jones

 

பொது உரிமையிலிருந்து மனித உரிமை: தாக்கம் மற்றும் மரபு

மறுமலர்ச்சி நகரம் வாஷிங்டனின் சேறும் சகதியும் நிறைந்த குட்டையாக கருத முடியாது. ஏனெனில், இது வரலாற்றில் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு சிறந்த சிந்தனையாகும்.... அந்த சிந்தனை வேரூன்றி நாடு முழுவதும் வளர்ந்து வருகிறது. - ரெவ்.ஜெஸ்ஸி ஜாக்சன், “மறுமலர்ச்சி நகரம் ”, எபோனி, அக்டோபர் 1968.

ஏழை மக்கள் பிரச்சாரம் அமெரிக்க வரலாற்றில் ஒரு முக்கிய தருணத்திற்கான அடையாளக் குறியாகும். அமெரிக்கர்கள் அனைவருக்கும் பொருளாதார வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பைக் கோரிய ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றிணைத்து, இந்த பிரச்சாரம் எதிர்கால சமூக நீதி இயக்கங்களுக்கான செயல்களத்தை அமைத்துள்ளது.

மறுமலர்ச்சி நகரத்திலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்ட சில மாதங்களுக்குள்ளாகவே:

  • அமெரிக்க வேளாண் துறை, நாட்டின் மிக அதிகமாக உணவுத் தேவையுள்ள 1000 மாகாணங்களில் கூடுதல் உணவுத் திட்டங்களையும், அன்னையர் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு உணவுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.

  • பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டங்களை விரிவுபடுத்தவும், புதுப்பிக்கவும் அமெரிக்க காங்கிரஸ் $243 மில்லியன் நிதி ஒதுக்கியது.

  • அமெரிக்க காங்கிரஸ் முன்பே இருந்த தொழிலாளர் நலத் திட்டங்களை மேலும் நீட்டித்தது.

  • செனட் சபை கூடுதலாக $5 மில்லியன் நிதிக்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, மிக குறைந்த வயது குழந்தைகளுக்கான கல்வித் திட்டத்திற்கும், கோடைகால வேலைகளுக்கு $13 மில்லியன் நிதியும் ஒதுக்கி ஒப்புதல் அளித்தது.

  • அனைத்து பள்ளிக்கல்வி அமைப்புகளிலும் இருந்த பிரிவு முறைகளையும் 1969 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்திற்குள் அகற்ற சுகாதாரம், கல்வி மற்றும் நலனுக்கான அரசுத்துறை காலக்கெடு நிர்ணயித்தது.

  • அமெரிக்க பூர்வ இந்தியகுடிகளின் விவகாரங்களுக்கான பணியகத்தின் கல்வி மற்றும் நலத்திட்ட சேவைகளுக்கு 139 மில்லியன் டாலர்களை அமெரிக்க காங்கிரஸ் அங்கீகரித்தது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, வாடகை மானியங்கள் மற்றும் வீட்டுரிமை உதவிகளை அங்கீகரித்தது.

”எனக்கு ஒரு கனவு இருக்கிறது…..ஒன்றுபட்ட அமெரிக்கா“ பதாகை, 1968.

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் அமெரிக்கன் ஹிஸ்டரி (ஸ்மித்சோனியன்ஸ் அமெரிக்க வரலாற்றின் தேசிய அருங்காட்சியகம்)

க்ளாரா வாட்கின்ஸால் நன்கொடையாக வழங்கப்பட்டது

ஏழை மக்கள் பிரச்சாரம் பிரச்சாரத்தின் கறுப்பு வெள்ளை கைகள் பதாகை, 1968.

ஸ்மித்சோனியன்ஸ் அமெரிக்க வரலாற்றின் தேசிய அருங்காட்சியகம் (ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் அமெரிக்கன் ஹிஸ்டரி)

க்ளாரா வாட்கின்ஸால் நன்கொடையாக வழங்கப்பட்டது

 

பொது உரிமையிலிருந்து மனித உரிமை: தாக்கம் மற்றும் மரபு

“உச்சகட்ட சோகம்: மோசமானவர்கள் கட்டவிழ்த்துவிட்ட கொடூரம் அல்ல, மாறாக, நல்லவர்களின் மௌனமே” பதாகை, 1968.

ஸ்மித்சோனியன்ஸ் நேஷனல் மியூசியம் ஆஃப் அமெரிக்கன் ஹிஸ்டரி (ஸ்மித்சோனியன்ஸ் அமெரிக்க வரலாற்றின் தேசிய அருங்காட்சியகம்)

க்ளாரா வாட்கின்ஸால் நன்கொடையாக வழங்கப்பட்டது